Pages

Search This Blog

Thursday, October 31, 2013

கருமம்.. உடல் சுகத்திற்காக பெற்ற மகளை கள்ளக்காதலர்களை ஏவிக் கொன்ற பேய்...!

தனது உடல் சுகத்தையே பெரிதாக எண்ணிய ஒரு பெண் பேய், தான் பெற்றக் குழந்தை, தனது கள்ளக்காதலர்கள் இருவரை விட்டுக் கொலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
 
 அந்தக் கொடுமைக்காரப் பெண்ணின் பெயர் ராணி. 24 வயதாகிறது. திருமணமான இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த ராணி. இந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். அதில் ஒரு நபரின் பெயர் ரஞ்சித். இவர் லாரி டிரைவர். இன்னொரு நபரின் பெயர் கேசின். இந்த நபருக்கு வயது 19தான். இருவரும் ராணியுடன் நெருக்கமாகப் பழகினர். இதை ராணியும் ஏற்று ஒரே சமயத்தில் இருவருடனும் பழகி வந்துள்ளார்.
 
 இருவரின் நட்பு கிடைத்ததால் காமம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது ராணிக்கு. அதற்கு தனது மகள் பெரும் இடையூறாக இருப்பதாக நினைத்தார் ராணி. மகளைக் கொன்று விட்டு எப்போதும் இந்த இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்கவும் தீர்மானித்தார். 
 
தனது முடிவை இரு கள்ளக்காதலர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும், ராணியுடனான இன்பம் தடைபடாமல் தொடர்ந்தால் போதும் என்று எண்ணி, சரி என்று கூறினர். கடந்த 29-ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டுக்கு வந்துள்ளனர் இரு கள்ளக்காதலர்களும். பின்னர் குழந்தையின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்தனர்.
 பாவம், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது. 
 
பின்னர் ஒரு ஜேசிபியில் குழந்தையின் உடலைப் போட்டு நீண்ட தூரம் சென்று குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராணி குழந்தையைக் காணோம் என்று கூறி கண்ணீர் வீட்டுக் கதறி அழுது பெரிய்ய டிராமா போட்டுள்ளார். 
 
 மேலும் போலீஸிலும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் ராணியின் நீலிக் கண்ணீரை கண்டுபிடித்து விட்டனர். உரிய முறையில் விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது... ராணியின் குரூரமான மறுபக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் ராணியையும், அவரது இரு கள்ளக்காதலர்களையும் போலீஸார் கைது செய்தனர். உடல் சுகத்திற்காக இப்படி ஒரு கொடூரமா... ?

1 comment:

Post a Comment