tag:blogger.com,1999:blog-21750260650907320572024-02-25T23:01:31.031-08:00தேசியம்இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்குAnonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comBlogger264125tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-48137133110191236152015-05-10T21:15:00.002-07:002015-05-10T21:15:46.463-07:00ரூ.4 ஆயிரம் கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: அமலாக்க பிரிவு அதிகாரிகள் டெல்லியில் அதிரடி சோதனை 250 செல்போன்கள் பறிமுதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img src="http://img.dailythanthi.com/Images/Article/201505110817491899_On-IPL-betting-trail-ED-carries-out-raids-in-Delhi-Gurgaon_SECVPF.gif" /><br />
<span style="font-family: Latha; font-size: 13px;"><br /></span>
<span style="font-family: Latha; font-size: 13px;">ரூ.4 ஆயிரம் கோடிக்கு நடந்ததாக கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 250 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;"><u>ரூ.4 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்</u> </span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">கடந்த மார்ச் மாதம் 19–ந் தேதி குஜராத் மாநிலம் வதோதரா புறநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பெரும் அளவில், 8–வது ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதாக அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இதைத்தொடர்ந்து அங்கு சென்று சோதனை நடத்திய அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் மேலும் 13 பேர் கைது ஆனார்கள்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">பின்னர், மார்ச் 26–ந் தேதி இதே அமலாக்க பிரிவினர் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், சந்தேகத்துக்குரிய மேலும் 2 முக்கிய நபர்கள் மற்றும் சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">துபாயில் பதுங்கல் </span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இவர்களில் ஒருவரான முகேஷ் சர்மா என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தின் உதவியுடன் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வருவதும் தெரிய வந்தது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் முகேஷ் சர்மா துபாயில் இருந்து ‘லாகின் ஐ.டி, பாஸ்வேர்ட்’ பெற்று இந்திய வாடிக்கையாளர்களிடம் சூதாட்ட தொகையை பெறுவதும், விநியோகம் செய்வதும் தெரிய வந்துள்ளது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இந்தியாவில் இருந்து தப்பியோடிய முகேஷ் சர்மா தற்போது துபாய் நாட்டில் பதுங்கி இருப்பதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">பாகிஸ்தான் தரகர் </span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இந்த நிலையில் ஆமதாபாத் நகர அமலாக்க பிரிவினருக்கு, ஏற்கனவே கைதானவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு உரிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய சிலர் டெல்லி மற்றும் அரியானாவின் குர்கான் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த தரகர் ஒருவர் இந்த பெரும் சூதாட்டத்தில் ஈடுபடுவதை அமலாக்க பிரிவினர் கண்டுபிடித்தனர். கிரிக்கெட் சூதாட்டம் குர்கானில் நடைபெறுவதாகவும், இதற்கான பண பரிவர்த்தனை டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள 2 கட்டிடங்களில் நடப்பதாகவும் அமலாக்க பிரிவினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">250 செல்போன்கள் பறிமுதல் </span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இதையடுத்து அவர்கள் உடனடியாக டெல்லி விரைந்தனர். அங்கு உள்ளூர் அமலாக்க பிரிவினர் உதவியுடன் டெல்லி கரோல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்கள், சாஸ்திரி நகர் மற்றும் குர்கான் ஆகிய 4 இடங்களில் நாள் முழுக்க அதிரடி சோதனை நடத்தினர்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">அப்போது கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 250 செல்போன்கள், 10 லேப்–டாப் கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">மும்பை, பெங்களூரு</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">டெல்லியில் நடத்தியதுபோலவே மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் அமலாக்க பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இது குறித்து, அமலாக்க பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அண்மையில் சில இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியை மையமாக கொண்டு இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவரை குறிவைத்தும் இந்த சோதனை நடத்தப்பட்டது’’ என்றன.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">எனினும் பாகிஸ்தான் தரகரின் பெயரை வெளியிட அமலாக்க பிரிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பாகிஸ்தானிலும் 8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">4 பேர் கைது </span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.</span><br style="font-family: Latha; font-size: 13px;" /><br style="font-family: Latha; font-size: 13px;" /><span style="font-family: Latha; font-size: 13px;">அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள தலா ஒரு கார், மோட்டார் சைக்கிள், சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 6 மொபைல் போன்கள், லேப்–டாப் மற்றும் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-67181644914956511552013-12-16T22:17:00.002-08:002013-12-16T22:17:31.196-08:00ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரி கடத்தல்: 7 பேர் கைது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156781
clearfix">
<div class="body ">
மன்னார்குடியில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரியை கடத்தி சம்பவத்தில் ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.<br />
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர் ராசிக்கல்
வியாபாரி சுந்தர் ராஜன் (43). இவரது நண்பர் திருவாரூர் சேர்ந்த
சுப்பிரமணியன் என்பவர், சுந்தர்ராஜனிடம் வெளி நாட்டில் இருந்து ஒருவர்
ராசிக்கல் வாங்க வந்திருப்பதாகவும்,<br />
<br />
எனவே வெள்ளைக் கற்கள் எடுத்துவருமாறு
கூறினாராம். இதையடுத்து, சுந்தர்ராஜன் ரூ. 3 லட்சம் மதிப்பிலான
ராசிக்கற்கள் எடுத்துக்கொண்டு திங் கள்கிழமை காலை திருத்துறைப்பூண்டி
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்துள் ளார். அ ப்போது
சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேர் ஒரு காரில் சுந்தர்ராஜனை ஏற்றிக் கொண்டு
நாள் முழுவதும் காரிலேயே பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்துள்ளனர்.<br />
<br />
இதற்கிடையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் சுந்தர்ராஜனை விடுவிக்க ரூ. 50
லட்சம் பணம் கேட்டு பேரம் பேசிவந்துள்ளனர். பேரத்தில் ரூ. 50,000
எடுத்துக்கொண்டு சுந்தர்ராஜனின் மைத்துனர் சரவணன் மன்னார்குடி பேருந்து
நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டவர்கள் சரவணனை
காரில் அழைத்துக்கொண்டு வேறு இடத்துக்கு செல்லும் போது, அவ்வழியே ரோந்து
பணியில் சென்ற காவலர்கள் சந்தேகப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.<br />
<br />
விசாரணையில் ராசிக்கல் வியாபாரி சுந்தர்ராஜன் கடத்தப்பட்டது
தெரியவந்ததையடுத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, ஒரு
இருசக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.<br />
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-47868025196744386982013-11-06T21:52:00.001-08:002013-11-06T21:52:18.172-08:00தேசியம்: திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்<a href="http://desiyamdivyam.blogspot.com/2013/11/blog-post.html?spref=bl">தேசியம்: திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்</a>: செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்க...Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-11057309191866768632013-11-06T21:34:00.004-08:002013-11-06T21:34:45.898-08:00 திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<img alt="மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி" hspace="5" src="http://tamil.oneindia.in/img/2013/11/07-mangalyaan455466-600-jpg.jpg" style="border: 0px;" title="மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி" vspace="5" /> </div>
<div>
</div>
<div>
செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல
திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்கு
பாராட்டு குவிகிறது.
இந்திய விண்வெளி துறையின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம்
அனுப்பும் திட்டம் நேற்று முன்தினம் நனவாகியது. பிஎஸ்எல்வி சி 25 ராக்கெட்
மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</div>
<div>
</div>
<div>
மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி
டிசம்பர் 1ந் தேதி அது தனது செவ்வாய் கிரக பயணத்தை தொடங்க இருக்கிறது. 300
நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையை அது
அடையும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவி்ன்
புகழ் அதிகரித்துள்ளது.</div>
<div>
</div>
<div>
இந்த வியத்தகு சாதனை படைத்த மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக
பணியாற்றியவர் சுப்பையா அருணன். இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த
கோதைசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா கூடங்குளம் அரசு
பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.
அருணன் ஆரம்ப கல்வியை திருக்குறுங்குடி அரசு பள்ளியிலும், உயர் கல்வியை
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியிலும் படித்தவர். கோவையில் பி.இ
மெக்கானி்க்கல் இன்ஜினியரிங்கில் ஹானர் பட்டம் பெற்றார்.
இஸ்ரோ மையத்தில் 1984ம் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்று
பெங்களூரு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். </div>
<div>
</div>
<div>
மங்கள்யாண் விண்கலத்தை
உருவாக்கியது முதல் அதை வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற சிந்தனையுடன்
அருணன் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளார் என அவரது இளைய சகோதரர்
தெரிவித்துள்ளார்.
அருணனின் சாதனையை பாராட்டி வள்ளியூர் பகுதியில் ஃபேஸ்புக் நண்பர்கள்
சார்பில் அவருக்கு பாராட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு
தரப்பினரிடமிருந்தும் அருணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரால்
நெல்லை மண்ணுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது.<br /><br /> </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-68895311380938922802013-10-31T03:33:00.000-07:002013-10-31T03:33:11.461-07:00 கருமம்.. உடல் சுகத்திற்காக பெற்ற மகளை கள்ளக்காதலர்களை ஏவிக் கொன்ற பேய்...! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தனது உடல் சுகத்தையே பெரிதாக எண்ணிய ஒரு பெண் பேய், தான் பெற்றக்
குழந்தை, தனது கள்ளக்காதலர்கள் இருவரை விட்டுக் கொலை செய்ய வைத்துள்ளார்.
இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.</div>
<div>
</div>
<div>
அந்தக் கொடுமைக்காரப் பெண்ணின் பெயர் ராணி. 24 வயதாகிறது. திருமணமான
இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். கணவரை விட்டுப் பிரிந்து தனது
குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த ராணி.
இந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக்காதலில் திளைத்து
வந்தார். அதில் ஒரு நபரின் பெயர் ரஞ்சித். இவர் லாரி டிரைவர். இன்னொரு
நபரின் பெயர் கேசின். இந்த நபருக்கு வயது 19தான். இருவரும் ராணியுடன்
நெருக்கமாகப் பழகினர். இதை ராணியும் ஏற்று ஒரே சமயத்தில் இருவருடனும் பழகி
வந்துள்ளார்.</div>
<div>
</div>
<div>
இருவரின் நட்பு கிடைத்ததால் காமம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது ராணிக்கு.
அதற்கு தனது மகள் பெரும் இடையூறாக இருப்பதாக நினைத்தார் ராணி. மகளைக்
கொன்று விட்டு எப்போதும் இந்த இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்கவும்
தீர்மானித்தார். </div>
<div>
</div>
<div>
தனது முடிவை இரு கள்ளக்காதலர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும், ராணியுடனான
இன்பம் தடைபடாமல் தொடர்ந்தால் போதும் என்று எண்ணி, சரி என்று கூறினர்.
கடந்த 29-ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டுக்கு
வந்துள்ளனர் இரு கள்ளக்காதலர்களும். பின்னர் குழந்தையின் கழுத்தை கொடூரமாக
நெரித்துக் கொலை செய்தனர்.</div>
<div>
பாவம், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது. </div>
<div>
</div>
<div>
பின்னர் ஒரு ஜேசிபியில் குழந்தையின் உடலைப் போட்டு நீண்ட தூரம் சென்று குழி
தோண்டிப் புதைத்துள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராணி
குழந்தையைக் காணோம் என்று கூறி கண்ணீர் வீட்டுக் கதறி அழுது பெரிய்ய டிராமா
போட்டுள்ளார். </div>
<div>
</div>
<div>
மேலும் போலீஸிலும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் ராணியின் நீலிக்
கண்ணீரை கண்டுபிடித்து விட்டனர். உரிய முறையில் விசாரித்தபோது குட்டு
வெளிப்பட்டது... ராணியின் குரூரமான மறுபக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பின்னர் ராணியையும், அவரது இரு கள்ளக்காதலர்களையும் போலீஸார் கைது
செய்தனர்.
உடல் சுகத்திற்காக இப்படி ஒரு கொடூரமா... ?<br /><br /> </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-1267199909648064042013-10-29T03:33:00.001-07:002013-10-29T03:33:21.387-07:00கரப்பான்பூச்சியை இனி அடிச்சு கொல்லாதீங்க! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img alt="" class="sliderImg" height="300" src="http://tamil.oneindia.in/img/2013/10/29-1383026521-cockroach23423-600-jpg.jpg" title="" width="400" /></div>
<br />
<br />
<div>
</div>
<div>
</div>
<div>
ஒரு கரப்பான் விடாம அடிச்சி கொல்லுங்க... என்று இந்தியாவில் விளம்பரம்
செய்கின்றனர். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சி என்றாலே அச்சமும்
அருவெறுப்பும் உள்ளது நம்மவர்களிடம். </div>
<div>
<br /></div>
<div>
ஆனால் அண்டை நாடான சீனாவிலோ கராப்பான் பூச்சியை பொறித்து சாப்பிடுகின்றனர்.
கரப்பான் பூச்சி பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் கோடி கோடியாய்
சம்பாதிக்கின்றனர்.</div>
<div>
</div>
<div>
உணவுக்குப் பயன்படுவதோடு மருந்துப் பொருளாகவும், அழகுசாதனப்பொருளாகவும்
கரப்பான் பூச்சி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே கரப்பான் பூச்சிக்கு
சீனாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
நம் ஊரில் வெறுத்து ஒதுக்கப்படும் கரப்பான்பூச்சியிடம் அப்படி என்னதான்
இருக்கிறது மேற்கொண்டு படியுங்களேன். </div>
<div>
<br /><div>
1.பூச்சிகளை சாப்பிடுறாங்க
நாம் அடித்துக் கொல்லும் கரப்பான் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும்
பொறித்து, வறுத்து சாப்பிடுகின்றனர் சீனர்கள். அதேபோல தென்ஆப்பிரிக்கா,
தென்அமெரிக்காவில் உள்ள மக்கள் கம்பளிப்புழு, வண்டு, தேள், குளவி போன்ற
பூச்சி, புழுக்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.</div>
<div>
<br /><div>
2.கோடிக்கணக்கில் வருமானம்
சீனாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சி பண்ணைகள் இருக்கின்றன.
ஒருகிலோ உலர்ந்த கரப்பான்பூச்சியின் விலை ரூ.2400. 61 ரூபாய் முதலீட்டில்
670 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்கின்றனர்.</div>
<div>
<br /></div>
<div>
<div>
3.விளம்பரம்
நம்ஊரில் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு
விளம்பரம் போல சீன டிவிகளில் கரப்பான்பூச்சி வளர்ப்பு பற்றிய விளம்பரங்கள்
பிரபலமாக உள்ளனவாம்.
இனி நம் வீட்டிலும் கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கருணையோடு பாருங்களேன்!</div>
<div>
<br /></div>
<div>
<div>
4.முடி வளரும்
வழுக்கைத் தலையில் முடிவளர பல விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால்
சீனாவில் லீ ஷீவான் என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை
அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி
வளர்ந்ததாக கூறியுள்ளார். முகம் பளபளப்பாக கரப்பான் பூச்சியை அரைத்து
பூசலாம் என்கின்றனர்.</div>
<div>
</div>
<div>
<div>
</div>
<div>
5.எய்ட்ஸ்-புற்றுநோய்
கரப்பான் பூச்சிகள் அணுக்கதிர் வீச்சையும் கூட தாங்கும் தன்மை கொண்டவையாம்.
இவற்றின் மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவைகளுக்கு மருந்து
கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.<br /><br /> <div>
6.உயிர்காக்கும் மருத்துவம்
கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக்
கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% சக்தி கொண்டவையாக உளவாம். முதலில்
இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள்
ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும்.</div>
<div>
<br /></div>
<div>
<div>
7.உயிர் காக்கும்
கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும்
மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள
நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.<br /></div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-56235581923332713242013-08-23T02:35:00.000-07:002013-08-23T02:35:13.833-07:00ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<img alt="ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு!" hspace="5" src="http://tamil.oneindia.in/img/2013/08/23-advocate-bhawani-singh-jayalalitha22-600.jpg" style="border: 0px none;" title="ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு!" vspace="5" /></div>
<div>
</div>
<div>
</div>
<div>
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்
ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக
பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </div>
<div>
</div>
<div>
1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த
வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.</div>
<div>
</div>
<div>
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக
மனு!
பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி
கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக சார்பில்
கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. </div>
<div>
</div>
<div>
அம்மனுவில் தங்களையும் இந்த
வழக்கில் வாதாட அனுமதிக்கக் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி
அளித்திருந்தார்.
தற்போது திமுக பொதுச்செயலர் அன்பழகன் புதிய மனு ஒன்றை தாக்கல்
செய்துள்ளார். </div>
<div>
</div>
<div>
அம்மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு
மாற்றியதன் நோக்கத்துக்கு எதிராகவே தற்போது வழக்கின் நிலை இருக்கிறது.
தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றிவிட்டு திறமை வாய்ந்த மூத்த
வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.<br /><br /> </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-51555551495733479162013-08-20T22:36:00.001-07:002013-08-20T22:36:45.777-07:00 தலைமைச் செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கூடம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156781
clearfix">
<div class="body ">
<img alt="" src="http://media.dinamani.com/2013/08/04/tamilnadu-secretariat-old-building.jpg/article1717698.ece/alternates/w460/tamilnadu%20secretariat%20old%20building.jpg" /><br />
<br />
சென்னையில் அமைந்துள்ள அரசு தலைமைச் செயலகத்தில்
பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் காக்கும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள்
அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி
புரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து
வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து
பணியாற்றுகிறார்கள்.<br />
<br />
தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து
பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக்
காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை
ஏற்படும். எனவே, <br />
அரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென
தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை, தலைமைச்
செயலகத்தில் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். </div>
<div class="body ">
இதன் அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சதுர அடியளவில்
ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான
உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும். இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக்
கருவிகளை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-10908554654568375912013-08-14T20:12:00.000-07:002013-08-14T20:12:00.415-07:00இணிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="height: 364px; margin-left: auto; margin-right: auto; text-align: center; width: 500px;"><tbody>
<tr><td style="text-align: center;"><img class="CSS_LIGHTBOX_SCALED_IMAGE_IMG" height="302" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJyYjBHZ3ZVM621TvR0_FtXQh7veN6UiviFbt9BIg4DyrDpRzmOVbNGl17ZQlRt3wF-d61l0sII4Fco_4SGhBLB8AF5jP5ihTbbrlY0HbgUcBzGnqVr5_qt6-saiggnfRw-74JElWu8LjL/s400/Indian-flag.jpg" style="height: 302px; margin-left: auto; margin-right: auto; width: 399px;" width="400" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் இணிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் </td><td class="tr-caption" style="text-align: center;"> </td><td class="tr-caption" style="text-align: center;"> </td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
</div>
<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-4341727857283107322013-08-13T21:38:00.003-07:002013-08-13T21:38:53.736-07:00அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<img src="http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_52507746220.jpg" width="600" /><br />
<br />
தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4.50 லட்சம் அரசு ஊழியர்களின்
காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆந்திராவில் தொடங்கியது. இதனால் ஆந்திரா
முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெலங்கானா தனி மாநிலத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்து 1ம் தேதி முதல் ராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட 13
மாவட்டங்களில் தொடர்ந்து பந்த் நடந்து வருகிறது. 14 நாட்களாக கடையடைப்பு,
பஸ்கள் நிறுத்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரசு ஊழியர், மாணவர்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு
போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன.காங்கிரஸ் காரிய கமிட்டியில்
அறிவித்த தெலங்கானா முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதற்கு
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உள்பட மக்கள்
பிரதிநிதிகள் கட்சி வேறுபாடின்றி 12ம் தேதிக்குள் தங்களது பதவியை ராஜினாமா
செய்ய வேண்டும். இல்லையேல் நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தில்
ஈடுபடுவோம் என கடலோர ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
விடுத்திருந்தது.<br /><br />ஆனால் சில மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள்
ஒரு சிலர் மட்டுமே ராஜினாமா செய்ததாலும், மத்திய அரசு தெலங்கானா மாநிலத்தை
பிரிக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு
12 மணிமுதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதனால் சீமாந்திரா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே
நிறுத்தப்பட்டது. சீமாந்திரா பகுதிகளில் உள்ள 123 அரசு பணிமனைகளில் சுமார்
13 ஆயிரம் அரசு பஸ்கள் நள்ளிரவு முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
பணிமனைகளுக்கு பூட்டு போடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 70
ஆயிரம் பேர் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் 5
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்று அதி காலை முதல்
நிறுத்தப்பட்டது. <br /><br />இதனால் போக்குவரத்து அடியோடு
ஸ்தம்பித்தது.திருப்பதி&திருமலைக்கு இடையே எப்போதும் இல்லாத வகையில்
நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையிலிருந்து கைக்குழந்தை மற்றும்
முதியோர்களுடன் திருப்பதிக்கு நடந்தே வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு
முதல் தொடங்கிய காலவரையற்ற இப்போராட்டத்தில் 4.50 லட்சம் ஊழியர்கள்
பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தினால் அனைத்து அரசு அலுவலகங்கள்
பூட்டப்பட்டுள்ளது. கருவூல துறை அதிகாரிகளும் இந்த போராட்டத்தில்
பங்கேற்றதால் நாளொன்றுக்கு சுமார் 150 கோடிவரை பண பரிமாற்றம்
முடங்கியுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சீமாந்திரா பகுதியில் 24
மணிநேரம் பெட்ரோல் பங்க்குகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டது.<br /><br /> இதனால்
13 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சினிமா
தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல், டீக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன.
காய்கறி, பால், குடிநீர், மின்சாரம், அவசர மருத்துவ சேவை போன்ற
அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு
வார காலத்துக்குள் தெலங்கானா குறித்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால்
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கூட முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என
போராட்ட குழுவினர் எச்சரித்துள்ளனர்.<br /><br />பஸ்களுக்கு தீவைப்பு<br />விஜயவாடாவில்
உள்ள அரசு பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பஸ்களுக்கு
ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து, தீயணைப்பு
துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த
தீயணைப்பு படையினர் பஸ்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-59137241245319809282013-06-10T06:22:00.000-07:002013-06-10T06:22:08.477-07:00ஜெர்மனியில் அம்மன் ஸ்ரீ நாகபூஷணி வருடாந்தர உற்சவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img height="400" id="irc_mi" src="http://profile.ak.fbcdn.net/hprofile-ak-ash4/c58.163.546.546/s160x160/389193_409491989103236_648943677_n.jpg" style="margin-top: 117px;" width="400" /> </div>
<br />
<br />
<br />
பிராங்க்பர்ட்: ஜெர்மனி, பிராங்க்பர்ட் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் வருடாந்தர
உற்சவம் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 15 நாள் உற்சவம் நடைபெற
இருக்கின்றது. கொடிஏற்ற விழாவில் சிறுப்பு நிகழ்ச்சியாக, இரண்டு முறை
ஜனாதிபதி விருது பெற்ற சஞ்சீவ் பட்டச்சார்யா அவர்களின் மணிப்புரி நடனம்
நடைபெற்றது.<br />
<br />22ம் தேதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும், 23ம்
தேதி ஞாயிறு தீர்த்தோற்சவமும், 24ம் தேதி திங்கள் திருப்பொன்னூஞ்சலும்
சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நாட்களில் அம்பிகை அடியார்கள் அம்பிகையை
தரிசித்து அம்பாளின் அனுக்கிரகங்களைப் பெற்றேகும் வண்ணம் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். விழா நாட்களில் பக்தர்களுக்கு தினமும் மதியமும்
மாலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-24135225863237165112013-06-04T05:57:00.002-07:002013-06-04T05:57:21.203-07:00தமிழகத்தின் மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img class="rg_i" data-src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcShpEiJpxPrVsuBBEgASOifC3rv2ca-BpjHxR-Tl7voWooBeRYJQQ" data-sz="f" height="320" name="7FpDWg4rvfsd0M:" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcShpEiJpxPrVsuBBEgASOifC3rv2ca-BpjHxR-Tl7voWooBeRYJQQ" style="height: 159px; margin-left: 0px; margin-top: 0px; width: 318px;" width="640" /> </div>
<br />
<br />
<br />
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தற்போதைய உறுப்பினர்களான, ஏ.இளவரசன், கனிமொழி, திருச்சி சிவா,
பி.எஸ்.ஞானதேசிகன், மைத்ரேயன், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை
24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல்
ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. <br />
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி,<br />
<br />
வரும் ஜூன் 10ம் தேதி திங்கள் அன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.<br />
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 17 திங்கள் கிழமை<br />
வேட்புமனுக்கள் பரிசீலனை: ஜூன் 18 செவ்வாய்க்கிழமை<br />
வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசிநாள் : ஜூன் 20 வியாழக்கிழமை<br />
<br />
தேர்தல் நாள் (தேவைப்பட்டால்) : ஜூன் 27 வியாழக்கிழமை<br />
தேர்தல் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை<br />
வாக்கு எண்ணிக்கை நாள்: ஜூன் 27 வியாழன் மாலை 5 மணி<br />
தேர்தல் நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டிய நாள் : ஜூன் 29 சனிக்கிழமை.<br />
- இதனை இன்று (ஜூன் 4) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-13362098432840581572013-06-01T05:35:00.000-07:002013-06-01T05:35:16.470-07:00காவிரி விவகாரம்:தண்ணீர் தர முடியாது விதிகளுக்கு கட்டுப்படும் காங்., அரசு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புதுடில்லி: தண்ணீர் இன்றி தவிக்கும் பயிரை காப்பாற்ற அவசரமாக தண்ணீர்
திறந்து விட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என
கர்நாடகா தெரிவித்து விட்டது. நீண்ட காலமாகவே இது போன்று அடம் பிடிக்கும்
கர்நாடக அரசுக்கு மத்திய அரசு நிர்ப்பந்தம் தர வேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை வைத்துள்ளனர். <br />
<br />இதற்கிடையில் இது குறித்து
நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்; அரசின்
விதிகளுக்கு கட்டப்பட்டு மாநில காங்கிரஸ் அரசு செயல்படும் என்றார். <br />
<br />
காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஆணை மத்திய அரசுஇதழில்
வெளியிடப்பட்ட பிறகும் இந்த மாநில அரசு தொடர்ந்து தனது முடிவை மாற்ற
மறுத்து வருகிறது. காவிரி தண்ணீர் பிரச்னை குறித்து தற்காலிக கண்காணிப்பு
குழு கூட்டம் இன்று கூடியது. மத்திய நீர்வளத்துறை செயலர் சர்க்கார்
தலைமையில் நடந்தது. கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி மாநில தலைமை செயலர்கள்
மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். <br />
<br /><b>
தண்ணீர் தர முடியாது:</b> கூட்டத்தில் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கும்
நிலையில் இருப்பதால் குறுவை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு 10 டி.எம்.சி.,
தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இதற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டித்தான் முடிவு செய்வோம் என்றனர். 4 வார கால
அவகாசம் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எவ்வித முடிவும்
எடுக்கப்படாமல் முடிந்தது.<br />
<br />ஜூன் 12 ல் மீண்டும் கூடுகிறது:
இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை
செயலர் சர்க்கார் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த கூட்டம் மீண்டும் வரும்
12 ம் தேதி நடக்கிறது . இதில் தமிழக அரசின் கோரிக்கை குறி்தது முடிவு
எடுக்கப்படும். என்றார். <br />
<br />
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னையில் நிருபர்களிடம்
கூறுகையில்; இரு மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக காவிரி
ஆணைய இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.
விதிகளுக்கு கட்டுப்படும்.இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை
ஏற்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.<br />
<br /><br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-67786372139485004102013-05-27T22:04:00.002-07:002013-05-27T22:04:45.094-07:00குடிநீரா விற்கப்படுவது கெடு நீர்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156781
clearfix">
<div class="body ">
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவப் பேராசான்.
ஆம். அண்டத்தின் கோள்களில் உயிர்ப்போடு இருக்கும் கோள் பூமி என்பதற்கு
ஆதாரமே தண்ணீர்தான். மண் மட்டுமல்ல, மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களும்
தண்ணீரின் தயவில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!<br />
மனித உடலில் நரம்புகள், எலும்புகள் இருப்பதைப் போலவே பூமிக்கு ஆறுகளும்,
ஓடைகளும், குளங்களும், குட்டைகளும் ரத்த நாளங்களாகவும், உள்ளிருக்கும்
பாறைகள் உள்ளிட்ட கனிமவளங்கள் சதைகளாவும் விளங்குகின்றன.<br />
<br />
ஆனால், நோய்க்கிருமிகள் எப்படி மனிதரின் ரத்த நாளங்களையும், சதைகளையும்
அழித்து உடலைப் பாதிக்கின்றனவோ அதுபோலவே வளர்ச்சி எனும் பெயரில் ஆறுகளை
அழித்தும், கனிம வளங்களை வெட்டியெடுத்தும் பூமியை நாம் பாதிக்கச்
செய்கிறோம்.<br />
<br />
நீரும், கனிம வளங்களும் அதனதன் விகிதத்தில் இருந்தாலே நாம் வாழும்
பூமியும் நமக்குப் பாதுகாப்பான தளமாக இருக்கும். இதில் எந்த கனிமவள விகிதம்
குறைந்தாலும் ஆபத்துதான்.<br />
<br />
ஏற்கெனவே பாறைகள் "கிரானைட்' எனும் பெயரில் பூமியிலிருந்து பெருமளவில்
வெட்டியெடுக்கப்படுவதால், பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பு பகுதியாக கருதப்பட்ட
இடங்களெல்லாம் தற்போது எளிதில் பூகம்பம் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.<br />
<br />
தற்போது நிலத்தடி நீரின் அளவும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டதை
ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆம்....தமிழகத்தின் பல நகரங்களில்
ஆழ்துளைக் கிணறுகளில் நூறடி, இருநூறடி ஆழத்தில் நீர் கிடைத்த காலம்
மலையேறிவிட்டது.<br />
<br />
இதை உணர்ந்துதான் கடந்த அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா "மழை
நீர்சேகரிப்புத் திட்டத்தை'க் கொண்டுவந்தார். அத்திட்டத்தின் எதிர்கால
நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் அரசியலாக்கி முழுமையாகச் செயல்படுத்தாமல்
விட்டுவிட்டனர். தற்போது கூட மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு மக்கள்
முக்கியத்துவம் தராமலிருப்பது யானை தன் தலையில் தானே மண்ணை
அள்ளிப்போட்டுக்கொள்வதுபோல உள்ளது.<br />
<br />
தமிழகத்தில் பெரிய குடிநீர்த் திட்டங்கள் கூட நிலத்தடி மற்றும்
ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் ஆறு
இல்லாத, ஓடை மற்றும் பெரிய ஏரிகள் இல்லாத பகுதிகளுக்கு குறிப்பிட்ட ஆறு,
ஓடைகளில் இருந்துதான் குடிநீர் கொண்டுசெல்ல திட்டம் அறிவிக்கப்பட்டது.<br />
<br />
ஆனால், இப்போது வைகை ஓடும் மதுரைக்கும், தமிழத்தில் பெரிய கண்மாய்
உள்ளதாகக் கூறப்படும் ராமநாதபுரத்துக்கும் கூட காவிரி ஆற்றிலிருந்தே
குடிநீர் கொண்டுவர வேண்டியுள்ளது.<br />
<br />
நிலைமை இப்படியே போனால், அடுத்த மாநிலங்களோடு தண்ணீருக்காகத் தமிழகம்
போராட்டம் நடத்துவது ஒருபுறமிருக்க, இங்கேயே அடுத்தடுத்த ஊர்களுக்குள்ளும்
குடிநீருக்காகப் போராடும் அபாயமும் உள்ளது.<br />
<br />
நீருக்காக ஒருபுறம் போராட்டம் தொடங்கியிருக்கும் நிலையில் அந்தக்
குடிநீரையும் மக்களுக்குச் சுத்தமாக வழங்குகிறோமா என்ற கேள்வியும்
எழுந்துள்ளது. மனிதர்களுக்குள் பரவும் தொற்றுநோய்களில் 60 சதத்துக்கும்
மேலானவை தண்ணீர் மூலமே பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.<br />
<br />
குடிநீரில் கலந்திருக்கவேண்டிய கனிம அளவை உலக சுகாதார நிறுவனம்
வரையறுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கனிமம்
அதிகமாகி அந்த நீரை அருந்தும் மக்கள் குறிப்பிட்ட நோய்ப்
பாதிப்புக்குள்ளாவது தொடர்கிறது. நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர்
மற்றும் ராமநாதபுரத்தில் உப்பும், திண்டுக்கல், கரூர், மதுரை, நாகபட்டினம்,
புதுக்கோட்டை உள்ளிட்டவற்றில் இரும்பும், சேலம், தருமபுரி, கரூர்
உள்ளிட்டவற்றில் நைட்ரேட்டும், தேனி, ஈரோடு, விருதுநகர் பகுதிகளில்
புளோரைடும் குடிநீரில் அதிகமிருப்பது தெரியவந்துள்ளது.<br />
<br />
குடிநீரால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே குளோரின் மற்றும்
பிளீச்சிங் பவுடர் மூலம் குடிநீரைச் சுத்திகரிப்பது நடைபெறுகிறது. ஆனால்,
தற்போது நவீன முறை எனும் பெயரில் "சில்வர் அயோனைசேஷன்' முறையால் குடிநீரைச்
சுத்திகரிக்கத் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.<br />
<br />
உலக சுகாதார நிறுவனமே குடிநீரைச் சுத்தம் செய்ய குளோரின் பயன்பாடு
நல்லது என ஏற்றிருக்கிறது. ஆனால், இப்போது "சில்வர் அயோனைஷேசன்' முறையில்
குடிநீரைச் சுத்திகரிக்கப் போவதாகக் கூறுவது மனித நலத்துக்கு
கேடுவிளைவிப்பதாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களது கருத்து. <br />
"சில்வர்' என்பது மனித உடலில் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதன்
அளவு கூடினால் சிறுநீரகம், கணையம், நுரையீரல், இதயம், மூளை நரம்பு மண்டலம்
ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்.<br />
<br />
இந்த நிலையில் அரசு குடிநீர் திட்டங்களிலும், தனியார் விற்கும்
குடிநீரிலும் எந்தெந்த உலோகம் எந்த அளவுக்குக் கலந்திருக்கிறது, அவற்றால்
உடல் நலத்துக்கு எந்த வகையில் நன்மை என்பதைத் தெரிவிப்பதில்லை. <br />
குடிநீரைச் சோதனையிட்டதற்காகவே தனியார் குடிநீர் விற்பனையாளர்கள்
போராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிலையில் அந்த நீரில் உள்ள உலோகம்
குறித்து எங்கே தெரிவிக்கப் போகிறார்கள்? அவர்கள் விற்கும் குடிநீர் எங்கு,
எந்த முறையில் எடுக்கப்படுகிறது, எந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறது,
அது உடல்நலனுக்கு உகந்ததா என்பதைக்கூட அவர்கள் தெரிவிக்க முன்வருவதில்லை.<br />
<br />
ஆக, நாம் வாங்கும் குடிநீரானது உடல் நலத்துக்குச் சரியானதா, எதிரானதா
என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. அவ்வாறில்லை எனில் அது கண்ணை விற்று
சித்திரம் வாங்கிய கதையாகிவிடும் என்பதே உண்மை.<br />
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-19981077753219659972013-05-25T06:33:00.001-07:002013-05-25T06:33:42.320-07:00ஜாமீனில் வந்த திருடன் போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டினான் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திருடன் ஒருவன் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் ராயப்பேட்டையில்
நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில்
வசித்து வருபவர் தியாகராஜன்(45). கோட்டூர்புரம் காவல் நிலையத்தில்
குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராயப்பேட்டை
செல்லம்மாள் தோட்டத்தில் வசித்து வருபவன் சைக்கோ விமல் (என்ற) விமல்ராஜ்.
இவன் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளான். வழக்கு தொடர்பாக
விமல்ராஜை விசாரிக்க தலைமை காவலர் தியாகராஜன் அவனது வீட்டுக்கு சென்றார். <br /><br />போலீஸ்
ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என்று அவனிடம் கூறினார்.
இதற்கு விமல்ராஜ் மறுத்தார். இதையடுத்து தகராறு ஏற்பட்டது. விமல்ராஜை
கண்டித்துவிட்டு தியாகராஜன் ஸ்டேஷனுக்கு புறப்பட்டார். ஆத்திரத்தில் இருந்த
விமல்ராஜ் அவரை பின்தொடர்ந்து வந்து, தியாகராஜனின் கழுத்தில் அரிவாளால்
வெட்டினான். <br /><br />இதை சற்றும் எதிர்பார்க்காத தியாகராஜன் நிலை குலைந்து
அங்கேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தியாகராஜனை
மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து
அப்போலோ மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.<br />
<br />இதற்கிடையே, தியாகராஜனை அரிவாளால் வெட்டிய
விமல்ராஜை போலீசார் பிடித்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர். தியாகராஜனுக்கு மதுமதி என்ற மனைவி யும், சித்ரா என்ற மகளும்
உள்ளனர்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-40715932840640476462013-05-23T21:57:00.001-07:002013-05-23T21:57:21.454-07:00என்.எல்.சி. பங்குகளை விற்கக் கூடாது: <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156781
clearfix">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img alt="" src="http://media.dinamani.com/2013/05/24/jayaa.jpg/article1603374.ece/alternates/w460/jayaa.jpg" /></div>
<br />
<div class="body ">
<br />
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை விற்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.<br />
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:<br />
<br />
1957-ஆம் ஆண்டு, பிணையங்கள், ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளின் கீழ்
திருத்தியமைக்கப்பட்டவாறு, நெய்வேலி நிறுவனத்தில் தான் வைத்துள்ள சமவீத
பங்குகளில் 5 சதவீதத்தை மத்திய அரசு திரும்பப் பெற கருதியிருப்பதாக நான்
அறிகிறேன்.<br />
<br />
</div>
<div class="body ">
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் எந்தவொரு பகுதியும்
தனியார்மயமாக்கப்படுவதை என்னுடைய அரசு தொடர்ந்து வலுவாக மறுத்து வருகிறது.
சமவீத பங்குத் தொகையை குறைக்காமல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை
ஒரு பொதுத்துறை நிறுவனமாக பராமரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான
கருத்தாகும்.<br />
<br />
1957-ஆம் ஆண்டு பிணையங்கள், ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளில்
அண்மைக்காலத்தில் செய்யப்பட்டுள்ள சில திருத்தங்களின் அடிப்படையில், மத்திய
அரசு செயற்கையான ஒழுங்குமுறை இடர்ப்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாக
அறிகிறேன். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய அரசு தான்
வைத்திருக்கும் சமவீத பங்குத் தொகையை குறைப்பதற்கு இந்த விதிகளின்
அடிப்படையில் மேற்கோள் காட்டுவது, பொருத்தமாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ
இல்லை.<br />
<br />
தொழிலாளர்களிடையே கொந்தளிப்பு: பங்குகளின் ஒரு சிறு பகுதியைக்கூட
திரும்பப் பெறக் கருதினால், அதன் விளைவாக தொழிலாளர்களிடையே பெருமளவில்
கொந்தளிப்பு ஏற்படும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்து
கிடைக்கிற மின்சக்தியில் ஏதேனும் தடை ஏற்படுமாயின், அது மாநிலத்தின் நலனை
கடுமையாக பாதிக்கும்.<br />
<br />
தற்போது பொதுமக்களிடம் உள்ள 6.44 சதவீதப் பங்குகளை மீண்டும் வாங்குவதன்
மூலம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமானது பொதுத் துறை நிறுவனப்
பட்டியலிலிருந்து நீக்கப்படலாம். இந்த நிலை ஏற்படாமல், நெய்வேலி பழுப்பு
நிலக்கரி நிறுவனத்திற்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கிற வகையில், 1957- ஆம்
ஆண்டு பிணையங்கள் ஒப்பந்தங்கள் (முறைப்படுத்தல்) விதிகளில் திருத்தம்
கொண்டு வரப்படலாம்.<br />
<br />
இந்தச் சூழ்நிலைகளில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மத்திய
அரசு வைத்துள்ள பங்குகள் மேற்கொண்டும் திரும்பப் பெறப்படாமலிருப்பதை அல்லது
பங்குகளின் மதிப்பு படிப்படியாகக் குறைக்கப்படாமலிருப்பதை உறுதி
செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்
கொள்கிறேன் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கேட்டுக்
கொண்டுள்ளார்.<br />
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-52541937101363504712013-05-21T06:49:00.000-07:002013-05-21T06:49:01.009-07:00ஸ்ரீசாந்த்திற்கு இமெயிலில் அழகிகள் படங்கள் அனுப்பிய ஐதராபாத் இயக்குனர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<img class="rg_i" data-src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRBQh-iUtnrFJJPJe7Wb9UMMI-7MtEJTObbex9hACGKizX9lfyy" data-sz="f" name="XebP32zF2M8nMM:" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRBQh-iUtnrFJJPJe7Wb9UMMI-7MtEJTObbex9hACGKizX9lfyy" style="height: 181px; margin-left: 0px; margin-top: 0px; width: 219px;" /> <br />
<br />
<br />
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்,
சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் கடந்த 4 நாட்களாக தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் கைதாகியுள்ள 14 சூதாட்டத்தரகர்களிடமும் கிடுக்கிப்பிடி
விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஸ்ரீசாந்த் தங்கியிருந்த மும்பை
சொகுசு ஓட்டல் அறையில் இருந்து போலீசார் லேப்டாப், செல்போன், டைரிகள்,
ஐபேடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருந்தனர். ஸ்ரீசாந்த்திற்கு வந்திருந்த
இமெயில்களை பார்த்த போது ஐதராபாத்தை சேர்ந்த இயக்குனர் ஒருவர் ஏராளமான
மாடல் அழகிகளின் படங்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது. <br />
<br />
<img class="rg_i" data-sz="f" name="F64x6ZvLAya_qM:" src="" style="height: 159px; margin-left: 0px; margin-top: 0px; width: 318px;" /><br /><br />இவர்களில்
சிலர் போட்டி நடைபெறும் இடங்களுக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும்
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் வீரர்களையும் தங்களது வலையிலேயே
வைத்திருக்க அழகிகள் சிலரை புக்கிகள் பயன்படுத்தியதும் ஏற்கனவே நடந்த
விசாரணையில் தெரியவந்திருந்தது. இவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புக்கிகள் உயர்ந்த தொழில்
நுட்பத்தை கையாண்டுள்ளனர். <br />
<br />
<img class="rg_i" data-src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSreL2GMyknSexUAIIZtzBoIBXisaxwCCpe5pMZYrrOoQjwuTyCrw" data-sz="f" name="XVyffyiEb8WEYM:" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSreL2GMyknSexUAIIZtzBoIBXisaxwCCpe5pMZYrrOoQjwuTyCrw" style="height: 178px; margin-left: 0px; margin-top: 0px; width: 282px;" /><br /><br />சமூக இணையதளங்கள் மூலம் 3 கிரிக்கெட்
வீரர்களுக்கும் நெருக்கமாக இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தங்களது
திட்டங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு
அதிக அளவில் பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-16623503642800348632013-05-19T05:37:00.000-07:002013-05-19T05:37:56.341-07:00அண்ணாமலைப் பல்கலையில் நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வலியுறுத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156781
clearfix">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img height="229" id="irc_mi" src="http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_36893427372.jpg" style="margin-top: 82px;" width="457" /> </div>
<br />
<div class="body ">
<br />
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்
சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என தமிழக
முதல்வருக்கு தமிழ்க சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br />
<br />
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நிதிநெருக்கடி,
நிதிமுறைகேடு ஆகியவற்றால் சிக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களின்
நலன் கருதி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மசோதாவை
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புற தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில்
நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு கவுன்சிலிங் மூலமே மருத்துவம்,
பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுகிறது.<br />
<br />
தனியார்
நிர்வாகத்தின் கீழ் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழகஅரசு
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு 2013-14 கல்வி ஆண்டில்
நுழைவுத்தேர்வு மூலமே மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அறிவித்துள்ளார்.<br />
<br />
இந்த நடவடிக்கை கிராமப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,
ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் நலனுக்கு எதிரானதும், தமிழகஅரசின்
நிலைப்பாட்டிற்கு எதிரானதாகும். இப்பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில்
நுழைவுத்தேர்வு பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகித்துள்ளது. எனதே அதே
நடைமுறையை தற்போது பின்பற்றுவது மீண்டும் முறைகேடுகள் நடைபெற்று விடுமோ
என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.<br />
<br />
அரசின்
செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையாக செயல்படும் தமிழக முதல்வர்
அண்ணாமலைப் பல்கலையில் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்து, கவுன்சிலிங்
மூலம் அனுமதி சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளங்கோயாதவ்
தெரிவித்துள்ளார்.<br />
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-71654009868419256632013-05-19T04:02:00.000-07:002013-05-19T04:02:00.364-07:00 தமிழகத்திற்கு வரப்போகிறது அபாயம் காவிரி பிரச்னையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை
வாரியம் அமைப்பதற்கு பதிலாக, இடைக்கால ஏற்பாடாக, மேற்பார்வை குழு
அமைக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த மேற்பார்வை
குழுவே, நிரந்தர ஏற்பாடாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.<br /><br /><b>இறுதி தீர்ப்பு:</b><br />
தமிழகம்
- கர்நாடகா இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர்
மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி,
ஆறு ஆண்டுகளாகி விட்டது. பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு பின், தமிழக அரசின்
இடைவிடாத மேல்முறையீடுகள் காரணமாக, சுப்ரீம் கோர்ட் தலையிட்ட தால், கடந்த
பிப்ரவரி, 19ம் தேதி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, மத்திய
அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.<br /><br />இறுதி தீர்ப்பு, அரசிதழில்
வெளியிடப்பட்டது, தமிழக அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதன்மூலம்,
இறுதி தீர்ப்பில் உள்ள, தமிழகத்துக்கான தண்ணீர் பங்கீட்டிற்கு, சட்டப்பூர்வ
அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல.தீர்ப்பை
அமல்படுத்த வேண்டும் எனில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும்
ஒழுங்குபடுத்தும் குழு என்ற, இரண்டு அமைப்புகள் தேவை. இந்த இரண்டையும்
அமைக்க வேண்டும் என்பது, அரசிதழிலும் உள்ளது.<br /><br />காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கும் பொறுப்பு, மத்திய அரசை சார்ந்தது. நடுவர் மன்ற இறுதித்
தீர்ப்பை, அரசிதழில் வெளியிட்டவுடன், சூட்டோடு சூடாக, மேலாண்மை வாரியம்
அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.இந்நிலையில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டை, மீண்டும்
தமிழக அரசு நாடியது. அந்த வழக்கு, கடந்த, 10ம் தேதி, நீதிபதி லோதா
தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம், காவிரி
விவகாரத்தில், தமிழக அரசுக்காக வாதாடும், மூத்த வக்கீல், கோர்ட்டுக்கு
வரவில்லை.<br />அதே நேரத்தில், கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்
நாரிமன், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதமாகலாம். அதுவரை,
மேற்பார்வை குழு ஒன்றை அமைக்கலாம். இடைக்கால ஏற்பாடாக அந்தக் குழு
செயல்படட்டும்' என்றார்.<br /><br /><b>இடைக்கால ஏற்பாடு:</b><br />
கர்நாடகா வக்கீல்
முன்வைத்த, இந்த பரிந்துரையில் உள்ள சூட்சுமத்தை எதிர்த்து வாதாட, அன்றைய
தினம், தமிழக அரசு தரப்பு தவறி விட்டது. அதனால், கர்நாடக அரசின் யோசனையை,
அப்படியே ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "இடைக்கால ஏற்பாடாக, மேற்பார்வை குழு
அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.<br /><br />இதற்கு முன்,
காவிரி பிரச்னை தொடர்பாக, காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தக்
குழு கூடிய போதெல்லாம், தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டு, நீதி கிடைக்கவே
இல்லை. கடந்த கால உண்மை நிலை இவ்வாறு இருக்க, அந்த கண்காணிப்பு குழுவில்,
உறுப்பினர்களாக இருந்தவர்களையே, மீண்டும் உறுப்பினர்களாக கொண்டு,
மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அந்தக் குழுவிடம், நடுவர்
மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும், இடைக்கால பொறுப்பும்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.<br /><br /><b>ஒருமித்த கருத்து:</b><br />
இந்த மேற்பார்வை
குழு அமைக்கும் யோசனை, காலம் கடத்தும் தந்திரமாகவே தெரிகிறது. இந்த குழு
கூடி ஆலோசிக்கும் போது, ஒருமித்த கருத்து ஏற்படாமல், மறுபடியும் பிரச்னை
உருவானால், சுப்ரீம் கோர்ட்டில், முறையிட வாய்ப்பு உள்ளது.அதனால்,
மறுபடியும் கோர்ட், வழக்கு, மேல்முறையீடு என, அலைய வேண்டிய சூழ்நிலை,
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, தமிழகத்துக்கு இந்த
மேற்பார்வை குழு என்ற யோசனையால், பாதகமே பெரிதும் நிகழும்.<br /><br />மத்தியிலும்,
மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகளே இருப்பதால், இடைக்கால ஏற்பாடாக
அமைக்கப்பட்ட, இந்த மேற்பார்வை குழுவையே, நாளடைவில், நிரந்தர ஏற்பாடாக
மாற்றும், அபாயமும் உள்ளது.இந்த உண்மைகள், சற்று தாமதமாக தெரிய
வந்துள்ளதால், தமிழக முதல்வர் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளார். இதை
அடுத்தே, நேற்று முன் தினம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மூன்றாவது
முறையாக, கடிதம் எழுதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என,
வலியுறுத்திஉள்ளார் என்று கூறப்படுகிறது.<br /><br />17 ஆண்டுக்கு பின்
மேட்டூர் அணை நீர்மட்டம் கடும் சரிவு:மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம்,
17 ஆண்டுகளுக்கு பின், 20.830 அடியாக சரிந்துள்ளது. இதனால், ஜூன் மாதம்
டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வாய்ப்பு இல்லை, என்பது உறுதியாகி
உள்ளது.<br /><br />மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. மொத்த நீர் கொள்ளளவு,
93.470 டி.எம்.சி.,யாகும். கடந்த பிப்ரவரி, 25ம் தேதி மேட்டூர் அணை
நீர்மட்டம், 34 அடியாகவும், நீர் இருப்பு, 9.214 டி.எம்.சி.,யாகவும்
இருந்தது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால்,
அணைக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. டெல்டா குடிநீர் தேவைக்காக
வினாடிக்கு, 600 கனஅடி நீர் வெளியேற்றுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம்
மளமளவென சரிந்து நேற்று, 20.830 அடியாகவும், நீர் இருப்பு, 4.346
டி.எம்.சி.,யாகவும் உள்ளது. கடந்த, மூன்று மாதத்தில் நீர்மட்டம், 14
அடியும், நீர் இருப்பு, 5 டி.எம்.சி.,யும் குறைந்துள்ளது.<br /><br />கடந்த,
1996 ஜனவரி, 28ல் மேட்டூர் அணை பாசன நீர் நிறுத்திய போது, நீர் இருப்பு,
4.632 டி.எம்.சி.,யாக இருந்தது. மீண்டும், 17 ஆண்டுக்கு பின், நடப்பாண்டு
மேட்டூர் அணை நீர் இருப்பு, 4.346 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. அணையில்
இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, ஆண்டுதோறும் ஜூன், 12ல் நீர்
திறக்கப்படும்.குறுவைக்கு நீர் திறக்க, அணையில் குறைந்தபட்சம், 52
டி.எம்.சி., நீர் இருக்க வேண்டும். குறுவைக்கு நீர் திறக்க இன்னும், 25
நாட்களே உள்ள நிலையில், அணையில், 4.346 டி.எம்.சி., இருப்பு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அணையில், காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவையை
நிறைவேற்றுவதற்கு போதுமான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.<br /><br />வரும்
நாட்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, அணை நீர்வரத்து
அதிகரித்தாலும், ஜூன், 12ம் தேதிக்குள் நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யை
எட்டுவது கடினம்.கடந்த, 10 ஆண்டுகளில், 2006, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில்
மட்டுமே ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதர
ஆண்டுகளில் தாமதமாக நீர் திறந்ததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை
பாதித்தது போல, நடப்பாண்டிலும் குறுவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.<br /><br /><b>சேற்றில் மூழ்கிய அளவுகோல்:</b><br />
மேட்டூர்
அணை நீர்மட்டம் 20 அடியாக குறைந்த நிலையில், அணையில் 15 அடி வரை சேறு
நிறைந்துள்ளது. இதனால், நீர்மட்டம் கணக்கிடுவதற்காக 20 அடி முதல் 25 அடி
வரை அணையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேல், இரண்டு அடி வரை சேற்றில் மூழ்கி
விட்டது. இதனால், அணை ஊழியர்கள் மண்ணை தோண்டி ஸ்கேலை கண்டுபிடித்து,
நீர்மட்டத்தை அளக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. </div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-48391351788373100792013-05-16T02:19:00.001-07:002013-05-16T02:19:44.646-07:00முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span class="userContent"><img alt="" class="spotlight" src="https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/523645_451213061619480_170154235_n.jpg" style="height: 288px; width: 460px;" /> <br />
முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும்
இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து
வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.<br /> <br /> முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?<br /> <br /> முதுகில் வலி உருவாக என்ன காரணம்?<br /> <br /> வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது!<br /><span class="text_exposed_show"> <br />
* தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு
உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின்
டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?<br /> <br /> “முதுகெலும்பும்,
முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும்.
முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள்
மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம்,
இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.<br /> <br /> முதுகெலும்பு, ஒன்றுடன்
ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7
எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு
பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5
எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும்
(சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின்
அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள்
அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும்.
எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.<br /> <br />
இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது.
முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின்
நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள்
முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல
முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”<br /> <br /> * எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?<br /> <br />
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும்
இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25
வயது வரை மிதமாகவும் இருக்கும்.”<br /> <br /> * முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?<br /> <br />
“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும்
வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம்
இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”<br /> <br /> * பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?<br /> <br />
“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால்
முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும்
வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால்
கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை
தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின்
முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”<br /> <br /> * கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?<br /> <br />
“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன்
பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில்
அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு
ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட
வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும்
உதவி புரிகின்றன.”<br /> <br /> * முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?<br /> <br /> “முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.<br /> <br />
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல்
இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ
அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய
இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன்
அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.<br /> <br />
ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும்,
எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு
ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.<br /> <br />
ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ,
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில்
போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி
குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும்
ஏற்படலாம்.<br /> <br /> ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது
வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து
முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை
பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
ஏற்படுகிறது.<br /> <br /> ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே
ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ்
போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”<br /> <br /> * மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?<br /> <br />
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு
அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை
தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு
பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க்
அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள
நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”<br /> <br /> * முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?<br /> <br />
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ,
டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம்.
பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை,
கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு,
இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து
இருக்க வேண்டிய அவசியமில்லை.”<br /> <br /> * முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?<br /> <br /> “வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”<br /> <br /> * கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?<br /> <br />
“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை
சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட
DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து
வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86
சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப
உதவும்.”<br /> <br /> * உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே.
முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று
ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?<br /> <br /> “எலும்பு
வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள்
சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க்
மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை
சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ
வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள்
கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”</span></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-86936891853377426492013-05-16T02:17:00.001-07:002013-05-16T02:17:55.095-07:00ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் கைது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<img src="http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_53351992369.jpg" width="600" /> <br />
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ்
அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி
போலீசார் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் 7 புக்கிகளும்
கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல்
மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான்
ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், புனே வாரியர்ஸ்,
டெல்லி டேர்டெவில்ஸ் என 9 அணிகள் விளையாடி வருகின்றன. தற்போது இந்த அணிக்கு
இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. <br /><br /><span style="color: red;"><b>இரவில் கைது</b></span><br /><br />நேற்று
மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்
கொண்டன. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மும்பையில்
தங்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்
ஸ்ரீசாந்த்தை நேற்று இரவு டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவருடன் இந்த அணியை சேர்ந்த அஜித் சந்த்லியா மற்றும் அங்கீத் சவான்
ஆகியோரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று டெல்லி கொண்டு
வரப்படுகிறார்கள். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக டெல்லியில் 3 புக்கிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2
பேரை தேடி வருகின்றனர். <br /><br />ஸ்பாட் பிக்சிங் புகார் அடிப்படையில்
ஸ்ரீசாந்த் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார்
தெரிவித்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணி
சார்பாக 53 ஒரு நாள் போட்டிகளிலும், 27 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி
இருக்கிறார். சந்த்லியா, அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சவான், மகாராஷ்டிர
மாநிலத்தை சேர்ந்தவர். சந்த்லியா இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ்
அணிக்காக விளையாடி இருக்கிறார். சவான், மும்பை அணிக்காக விளையாடி
இருக்கிறார். தற்போது இவர்கள் மூவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி
வருகின்றனர். <br /><br /><span style="color: red;"><b>ஸ்பாட் பிக்சிங்</b></span><br /><br />ஸ்பாட்
பிக்சிங் என்பது ஒரு போட்டியில் எத்தனை நோ பால், எத்தனை ஒயிட் பால் என்பதை
தீர்மானிக்கும் சூதாட்டம் ஆகும். வீரர்கள் ஒத்துழைப்புடன் புக்கிகள் இதனை
தீர்மானித்து அதன் அடிப்படையில் சூதாட்டம் நடத்துவார்கள். புக்கிகளுடன்
ஒத்துழைக்கும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. <br /><br /><span style="color: red;"><b>டோனி மற்றும் ஹர்பஜனை குற்றச்சாட்டும் ஸ்ரீசாந்த் அப்பா..</b></span><br /><br />ஸ்ரீசாந்த
சூதாட்ட புகாரில் சிக்கியதற்கு டோனி மற்றும் ஹர்பஜனே காரணம் என்று
ஸ்ரீசாந்த்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள
பேட்டியில், 'இந்த ஐ.பி.எல் தொடரில் தொடக்கத்தில் ஹர்பஜன் எதிராக
ஸ்ரீசாந்த் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதே போல் டோனியின் தனிப்பட்ட
வாழ்க்கை பற்றி ஸ்ரீசாந்த்துக்கு நன்றாக தெரியும், அதனால் மீண்டும் டெஸ்ட்
அணியில் உன்னை எடுக்க மாட்டேன் என்று டோனி மிரட்டினார். இதனால்,
ஸ்ரீசாந்த்துக்கு எதிராக ஹர்பஜன் மற்றும் டோனி செய்யும் கூட்டு சதி தான்
இது என்று கூறினார்.<br /><br /><span style="color: red;"><b>குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடை வி</b></span><span style="color: red;"><b>திக்க வேண்டும் : சரத் பவார்</b></span><br /><br />சூதாட்ட
புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த்,
அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோரை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது
வரவேற்கதக்கது என்று முன்னாள் ஐசிசி தலைவர் சரத் பவார் கருத்து
தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால்
வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.<br /><br /><span style="color: red;"><b>ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடி</b></span><br /><br />ஸ்பாட்
பிக்சிங் புகாரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் கைது
செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐபிஎல்
போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வீரர்கள்
கைதாகியிருக்கும் சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது.<br /><br /><span style="color: red;"><b>தரகராக செயல்பட்ட ஸ்ரீசாந்த்?</b></span><br /><br />இந்த
சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள மற்ற வீரர்களான சவான் மற்றும் சண்டிலாவிற்கு
தரகராக ஸ்ரீசாந்த் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக
கிடைத்த சூதாட்ட பணத்தை ஸ்ரீசாந்த் தான் இந்த 2 வீரர்களுக்கு பெற்று
தந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.<br /><br /><span style="color: red;"><b>ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்களை சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ</b></span><br /><br />சூதாட்ட
புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த்,
அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோரை பிசிசிஐ சஸ்பெண்ட்
செய்துள்ளது. சூதாட்டப் புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை இவர்கள்
சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே சமயம் இது தொடர்பாக
நடக்கும் விசாரணைக்கு பிசிசிஐ முழு ஒத்தழைப்பு தரும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br /><span style="color: red;"><b>டிராவிட் அதிர்ச்சி</b></span><br /><br />ராஜஸ்தான்
ராயல்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற செய்த
கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அணி வீரர்கள் மற்றும் தலைமையுடன் டிராவிட் இந்த பிரச்சனைக்
குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.<br /><br /><span style="color: red;"><b>விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு</b></span><br /><br />ஸ்பாட்
பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 3 வீரர்கள் கைது
செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க
தயாராக இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்பாட் பிக்சிங் புகார்
தொடர்பாக எங்கள் அணியை சேர்ந்த 3 வீரர்கள் விசாரணைக்கு
அழைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை. முழு விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை. எதையும் உறுதி
செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இதுதொடர்பாக பிசிசிஐயுடன் பேசி
வருகிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள 3
வீரர்களையும் போட்டியில் விளையாட உடனடியாக தடை செய்ய ஐபிஎல் நிர்வாகம்
முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-32474930516256614072013-04-12T05:47:00.000-07:002013-04-12T05:47:15.273-07:00என்னை யாரும் கடத்தவில்லை‘ என்று நடிகை அஞ்சலி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<img src="http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_21465265751.jpg" width="600" /> <br />
‘என்னை யாரும் கடத்தவில்லை‘ என்று நடிகை அஞ்சலி அவரது அண்ணன் ரவிசங்கரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். <br />சித்தி
பாரதி தேவி கொடுமை செய்வதாகவும் சொத்துகளை அபகரித்து விட்டதாகவும்,
அவருடன் சேர்ந்து இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும்,
அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் நடிகை அஞ்சலி
கூறியிருந்தார். <br /><br />இந்நிலையில், ‘தனது தங்கை அஞ்சலியை திங்கள் கிழமை
முதல் காணவில்லை. அவர் காணாமல் போனதற்கு பாரதி தேவிதான் காரணம்‘ என்று
அவரது அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில்
ரவிசங்கருடன் அஞ்சலி நேற்று போனில் பேசினார். அப்போது, ‘என்னை யாரும்
கடத்தவில்லை. சித்தப்பா சூரி பாபு என் தலைமுடியை இழுத்து அடித்ததால் நான்
ஓட்டலை விட்டு வெளியேறி விட்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன்.
இரண்டு நாளில் தைரியமாக வெளியே வந்து எல்லா உண்மைகளையும் சொல்வேன். என்னைப்
பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். என்னை காணவில்லை என்று கொடுத்த புகாரை
வாபஸ் வாங்கிவிடு. சித்தி பாரதிதேவி மீது கொடுத்து புகாரை வாபஸ் வாங்க
வேண்டாம்‘ என்று கூறியுள்ளார்.<br /><br />அவர் நடித்து வரும் தெலுங்கு பட
தயாரிப்பாளர் ரவிகிஷோரிடம் தொலைபேசியில் பேசிய அஞ்சலி, ‘குடும்ப சூழ்நிலை
காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். என்னால் ஏற்பட்ட இடையூறுக்கு
வருந்துகிறேன். இன்னும் இரண்டு நாளில் திரும்பி வந்து நடித்துக்
கொடுக்கிறேன்‘ என்று கூறியிருக்கிறார்.<br /><br />இதற்கிடையில் அஞ்சலி
ஓட்டலில் இருந்து வெளியேறும் வீடியோ காட்சியும், அஞ்சலியின் தொலைபேசி
உரையாடலும் வெளியாகி உள்ளது. அதை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். அஞ்சலி
காணவில்லை என்ற புகாரை போலீசார் திருப்பி தர மறுத்து விட்டனர். அவரை நேரில்
ஆஜர்படுத்தினால் மட்டுமே புகாரை வாபஸ் பெற முடியும் என்று கூறிவிட்டனர்.
எந்த நிமிடமும் அஞ்சலி ஐதராபத்தில் மீடியா முன் தோன்றலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-24577341090640968012013-02-28T20:09:00.002-08:002013-02-28T20:09:50.134-08:0082-வது பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கல் செய்ய காரணம் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒவ்வெரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி தேதி வந்தாலே நாட்டின் தலைவிதியை
நிர்ணயிக்கும் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும். இந்த பட்ஜெட் பற்றி
பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.<br />
<br />
.பொருளாதார சந்தை நிபுணர்கள் மட்டுமல்ல சாதாரண
மக்களும் இதை அறிந்து கொள்ள வேண்டியதுதான். சுதந்திரத்திற்கு முன்
இந்தியாவுக்கான பட்ஜெட் அப்போதைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்களின் வசதி
மற்றும் நோக்கத்துக்கு ஏற்ப தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இப்போது காலை
நேரத்தில் தாக்கலாகும் பட்ஜெட் ஆங்கிலேயர் காலத்தில் மாலையில் தாக்கல்
செய்யப்பட்டது. அதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்போதிருந்தே இந்தியா ஒரு
முக்கியமான சந்தை என்பதால், இந்திய பட்ஜெட் அறிவிப்புகள் அப்போதைய
பிரிட்டிஷ் பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது.<br />
<br />
இதை கருத்தில் கொண்டு, அவர்களது நாட்டில் பங்குச்சந்தை வணிகம்
தொடங்கும் நேரத்திற்கு ஏற்ப மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
முதல் பட்ஜெட் தாக்கல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் பட்ஜெட்
1947 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சுதந்தரம்
அடைந்து 3 மாதங்களே முடிந்திருந்த நிலையில் அந்த பட்ஜெட்டில் எந்த பெரிய
முடிவுகளும் எடுக்கப்படவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்தவர் பிரதமர் நேருவின்
அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ற தமிழர்
முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.<br />
<br />
பா.ஜ.க ஆட்சி காலத்தில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னும், பழைய
பிரிட்டிஷ் நடைமுறைப்படியே மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்த
பட்ஜெட், 2001 ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த்
சின்ஹா அந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ததன்
பின், பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாறியது. தேதிகள் சில நேரம் மாறலாம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளன்று மக்களவையில்
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது எழுதப்படாத விதியாக தொடர்கிறது.<br />
<br />
எனினும், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த தேதி மாறியதுண்டு.
கடந்த ஆண்டு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை
முன்னிட்டு, கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டது. தொடக்க காலங்களில், பட்ஜெட் உரை ஜனாதிபதி மாளிகையில்தான்
அச்சிடப்பட்டது. பின்னர், இது டெல்லி மின்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு
அச்சகத்துக்கு மாற்றப்பட்டது. அந்நேரத்தில் பட்ஜெட் உரையின் ரகசியங்கள் சில
கசிந்ததால், 1980 ல் இருந்து இது நிதியமைச்சக அலுவலகம் அமைந்துள்ள
பகுதியில் பிரத்யேக அச்சகம் அமைக்கப்பட்டு, அங்கு அச்சிடப்படுகிறது.<br />
<br />
பட்ஜெட் உரையில் வரிவிதிப்பு குறித்த பல முக்கிய முடிவுகள் இடம் பெறுவது
கசிந்தால், அது தனிநபர் சிலருக்கு பெருத்த லாபமாக அமையும் என்பதோடு,
அரசுக்கும் கணிசமாக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், பட்ஜெட் உரை
தயாரிப்பு முதல் அச்சிட்டு அவை புத்தகக்கட்டுகளாக மக்களவையை வந்தடையும் வரை
அனைத்து நிகழ்வுகளும் கண்காணிக்கப்படும். இந்த பணியில் ்ஈடுபடும் அனைவரும்
கடைசி சில நாட்களுக்கு வெளியுலக தொடர்பு அறுந்து, உணவு, உறக்கம் உட்பட
அனைத்தையும் நிதியமைச்சக பாதுகாப்பு அறைகளிலேயே முடித்துக் கொள்ள வேண்டிய
அளவு ரகசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்நாட்களில்
அவர்களது மொபைல் போன்கள் வழியே தகவல் கசியாதபடியும் கண்காணிப்பு பலமாக
இருக்கும்.<br />
<br />
நாடாளுமன்றத்தில் இதுவரை அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்
என்ற பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயைத்தான் சாரும். நேருவின்
அமைச்சரவை முதல், இந்திரா காந்தியின் அமைச்சரவை வரை மொத்தம் 10 முறை அவர்
பொது பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் 8 முறை முழு ஆண்டுக்கான
பட்ஜெட்டும், 2 முறை இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும்.<br />
<br />
இந்தியாவில் எத்தனையோ
பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்திய பட்ஜெட் என்பது 1992ல் மன்மோகன் சிங் தாக்கல் செய்த
பட்ஜெட்தான். இதில்தான் இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் தாராள மயமாக்கல்
பாதைக்கு மாற்றப்பட்டு, சர்வதேச முதலீட்டுக்கும், வர்த்தகத்துக்கும்
கதவுகள் திறந்துவிடப்பட்டன. ப.சிதம்பரம் நிதி அமைச்சர் டாக்டர் மன்மோகன்
சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட உடன் நிதி அமைச்சராக தேர்வு
செய்யப்பட்டவர் ப.சிதம்பரம்.<br />
<br />
2009 ம் ஆண்டு மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர்
உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி
மாறினார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கவே உள்துறை அமைச்சராகவே
தொடர்ந்தார் சிதம்பரம். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் 2012ம் ஆண்டு மீண்டும் நிதி அமைச்சர் பதவி
ப.சிதம்பரத்தை தேடி வந்தது.<br />
<br />
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, அடுத்தடுத்த 3 தலைமுறை வாரிசுகள் பட்ஜெட்
தாக்கல் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு
1958 லும், அவரது மகள் இந்திரா காந்தி 1970 லும், அவரது மகன் ராஜிவ் காந்தி
1987லும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதில் பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே
பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர் இந்திரா காந்தி மட்டுமே.<br />
<div id="op-under-content">
<div class="clearfix" id="block-block-7">
<div class="content">
<br />
</div>
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-77006118558748135622013-01-04T21:46:00.002-08:002013-01-04T21:46:59.304-08:00பாடசாலைகளிலிருந்தே பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்படுவதாக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;">பாடசாலைகளிலிருந்தே பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்படுவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;">நாட்டில் பிரிவினைவாதம்
தலைதூக்கியமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை மட்டும் குற்றம்
சுமத்துவது நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின்
கல்விமுறைமையிலேயே பிரிவினைவாதம் புறையோடியிருப்பதாகக்
குறிப்பிட்டுள்ளார்.பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், தமிழ்,
சிங்களம், ஆண், பெண், கலவன் என பல்வேறு வழிகளில் பிரிவினைகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;">நாத்தன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பௌதீக
ரீதியில் கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக
தோற்கடிக்கப்பட்ட போதிலும், ஈழக் கோரிக்கை தொடர்பான மனோ நிலையுடையவர்கள்
தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #741b47;">இந்த மனோ நிலை தொடரும் வரையில் ஒவ்வொரு
மார்ச் மாதமும் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாகத்
தெரிவித்துள்ளார்.</span></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2175026065090732057.post-61075535368723506952012-12-31T21:49:00.000-08:002012-12-31T21:49:57.187-08:00பெண்கள் போன் செய்தால் போதும்:"கவனிக்க' அடியாட்களை அனுப்புகிறது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டில்லியில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டதை அடுத்து,
பெண்கள் பாதுகாப்பிற்காக, சிவசேனா இளைஞர் அணி, பெண்களுக்கான, "ஹெல்ப்
லைன்' துவக்கியுள்ளது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, சில
ஆண்டுகளுக்கு முன் வரை, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
அந்த தினத்தன்று, இளம் ஜோடிகளை அடித்து விரட்டிய அந்த கட்சி, இப்போது,
பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.<br /><br />பால் தாக்கரேயின் பேரன்,
ஆதித்ய தாக்கரே தலைமையிலான, "சிவசேனா யுவ சேனா' அமைப்பு, மும்பை
பெண்களுக்கான, 24 மணி நேர, ஹெல்ப் லைனை ஏற்படுத்தியுள்ளது. <br />
<br />பிறரால்
தங்களுக்கு தொந்தரவு என கருதும் பெண்கள், இந்த எண்களை தொடர்பு கொண்டால்
போதும், அந்த இடத்தில் வந்திறங்கும் சிவசேனா கட்சியினர், தொந்தரவு
செய்பவர்களை, நன்கு, "கவனித்து' விடுவர்.<br /><br />டில்லி சம்பவத்தை அடுத்து,
சில நாட்களுக்கு முன் தான், மும்பையில் இந்த வசதியை, ஆதித்ய தாக்கரே
ஏற்படுத்தியுள்ளார். தினமும், 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக
கூறப்படுகிறது.அதுபோலவே, சிவசேனாவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில்
இணைந்து, முன்னணி தலைவராக விளங்கும், முன்னாள் முதல்வரும், இப்போதைய, மாநில
அமைச்சருமான, நாராயண் ரானேயின் மகன், நிதேஷ் ரானே நடத்தி வரும்,
"சுவாபிமான் சங்கத்னா' அமைப்பும், பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.<br /><br />இது
பற்றி, ரானேயின் அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு
அழைப்பு வந்த உடனேயே அந்த இடத்தில் உள்ள எங்கள் கட்சியினரை உஷார்படுத்தி,
சம்பவ இடத்திற்கு அனுப்பி, அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அடுத்த
சில நிமிடங்களில், போலீசுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களும் தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வோம்.தொடர்ந்து சில நாட்களுக்கு அந்த
விவகாரத்தை கண்காணிப்போம். இதனால் அந்த பெண்ணுக்கு, முழு அளவில் பாதுகாப்பு
கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.com3