Pages

Search This Blog

Wednesday, July 27, 2011

அ.தி.மு.க எம்.பி.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட உள்ள நிலையில், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுகவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவது குறித்தும், நாடளுமன்றத்தில் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் எம்.பி.க்களுக்கு ஜெயலலிதா எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, செம்மலை, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆனந்தன், பி. குமார், ஓ.எஸ். மணியன், சி. சிவசாமி, கே. சுகுமார், பி. வேணுகோபால், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், பாலகங்கா, ரபி பெர்னார்ட், இளவரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment