Pages

Search This Blog

Tuesday, December 06, 2011

நடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்

சென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா. இவர் 1996ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் போத்ராவிடம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பி செலுத்த காசோலை கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து விட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து சொர்ணா மீது சென்னை ஜார்ஜ் டவுன் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் போத்ரா மோசடி வழக்கு தொடர்ந்தார். இதையடு‌‌த்து சொர்ணா ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தார். மீதிப்பணத்தை செலுத்தாததால் அவருக்கு 6 மாத ‌சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சொர்ணா மே‌ல்முறை‌யீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சொர்ணாவின் தண்டனையை 3 மாதமாக குறைத்தா‌ர். மீதிப்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌ப்‌பீ‌ல் செ‌ய்தா‌ர் சொர்ணா. ஆனா‌ல் சொ‌ர்ணா‌வி‌ன் மனுவை தள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு செய்தார்.

அதில், போத்ராவுக்கு தர வேண்டிய பணத்தை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் டெபாசிட் செய்து விட்டேன். பெண் என்பதால் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, சொர்ணாவுக்கு விலக்களிக்க மறுத்த நீதிபதி, 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

இ‌ந்த நிலையில் நேற்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் மீண்டும் விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பை உறு‌தி செ‌ய்து தீர்ப்பளித்தது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்.

No comments:

Post a Comment