பாண்டிச்சேரி என்றாலே பாட்டில் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்த வி­யத்தில் பக்குவப் பட்ட பலருக்கும் பலான இடங்கள் தான் நினைவுக்கு வருகிறதாம். பாண்டிச்சேரி அருகில் அந்த அளவுக்கு, மலிவு விலையில் மதுவோடு. சிறிதளவு தூரத்தில் தமிழக எல்லையில் மதுவும் மாதுவும் கிடைக்கிற காரணத்தினால், இளைஞர்கள் கூட்டம் ஈக்களாய் மொய்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிற போது வேதனையாகத்தான் இருக்கிறது நமக்கு.

கண்களை பறித்து காந்தமாய் இழுக்கச் செய்யும் அளவுக்கு அழகுடைய பெண்கள் பலரும் இந்த வேலையில் இறங்கி இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், சும்மா ஜில்னு சுன்டி இழுக்க வைக்கிற இளசுகள், அதுவும் கேரள கிளிகள், ஆந்திரா ஆன்டிகள், கர்நாடகா கட்டழகிகள் என இவர்கள் கையால் மசாஜ்  பன்னிக்கனும் என்றால் எவருக்குத்தான் ஆசை வராது? அதனால் தான் ஆயுர்வேதிக் என்கிற பெயரில் இந்த அசிங்கத்தை அரங்ககேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதிலும் ஒரே ஆள் மூன்று இடங்களில் நடத்துகிறார் என்றால், எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இதில் மிக மிக வெட்க கேடான செய்தி என்னவென்றால், மாதா மாதம் 25,000 ரூ மாமூலாக கோட்டக்குப்பம் போலிசார் பெற்றுக் கொள்வதுதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்மட்டும் இல்லாமல் இந்த ஈனதனம் நடத்திவரும் உரிமையாளரே ஒப்புகொள்கிறார் கோட்டக் குப்பத்திலுள்ள ஆரோக்கியா ஆயுர்வேதிக், குயிலா பாளையம், ஆரோவில், பெரிய முதலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி என இவர்களின் எந்த சென்டருக்கு சென்றாலும் எடுத்த வேகத்தில் 1500 ரூ செலுத்தி விட வேண்டுமாம். ஆளுக்கு ஏத்த விலை என்கிற ரீதியில் தேர்ந்தெடுத்து இதமாக தேகத்தை வருடிக் கொடுக்கும் அந்த இளசுகள், அங்கே… இங்கே… என தடவி, வருடி, கிள்ளி சூடேற்றி கண்கள் சொருக்கும் நிலைக்கு போகும் நேரத்தில் சமயம் பார்த்து சேட்டையை துவங்கி விடுகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், ரெகுலர் வாடிக்கையாளர்கள் கசந்து போய் விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மட்டும் புதுசு புதுசு ஆளை மாற்றிக்கொள்கிறார்களாம்.

செய்தியை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட சென்டருக்கு போன் செய்து, ஹலோ.. நான் ரெகுலர் கஸ்டமர் பேசுறேன்… புதுசா எதுவும் இல்லையா? என்று கேட்டதற்கு, கேரளா பீஸ் மூனு புதுசா இருக்கு… உடனே வாங்க என்றார், எதிர்முனையில் பேசிய அந்த பெண்மனி. மேலும், ரேட் எப்படி? என்று துருவ … அதெல்லாம் ஆள பார்த்து பேசிக்கலாம் என்று முடித்துக்கொண்டார். இதெல்லாம் நம்மிடம் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக இருந்தாலும், இன்னும் சந்தேகம் தீராமல் நண்பர் ஒருவரிடம் போன் செய்து இதுபற்றி கேட்டோம். நீங்க சொல்றதெல்லாம் அத்தனையும் உண்மைதாங்க… நேற்று கூட எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மசாஜ் பண்ணிக்க போய் இருக்கார். அப்படி இப்படின்னு நல்லாத்தான் போயிட்டு இருந்துருக்கு. திடீரென கையை அங்க விட்டிருச்சாம் அந்த பொண்ணு. அலறி அடிச்சு ஓடி வந்திருக்கார் நம்ம ஆளு என்ற அவர் கூட ஒரு பத்திரிக்கை நிருபர் என்கிற போது, வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை என்று தான் எண்ண தோன்றுகிறது. இந்த ஒரு இடத்திலேயே இப்படி என்றால், மற்ற மற்ற இடங்களில் எப்படி இருக்கும்? என்பதுதான் நம் கேள்வி.