Pages

Search This Blog

Tuesday, September 13, 2011

*சும்மா இருப்பது*

சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொயுமா?
அதனையும் தாயுமானவரே பட்டியல்போட்டுத்தருகிறார்,
பாருங்கள்.

"கந்து உக மதக்காயை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல்கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சாரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகால் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அது! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆனதெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!
                                 -- தாயுமானவர்........,

மதயானையை அடக்கிவிடலாம்;
கரடி, புலி வாயைக்கட்டலாம்;
சிங்கத்தின் மீது சவாரி செய்யலாம்;
பாம்பை எடுத்து ஆட்டலாம்;
இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்;
மாயமாக மறைந்து புலனாகாமல் திரியலாம்;
தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்;
காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்;
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்;
ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்;
அக்கினி ஸ்தம்பனவித்தை புரிந்து நெருப்பின்மேல் இருக்கலாம்;
ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.
ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!

அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!
ஆளை விடு.

No comments:

Post a Comment