Pages

Search This Blog

Saturday, November 05, 2011

பெட்ரோல் விலை உயர்வு- பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது, பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அரசுக்கு தெரியும், என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். பெட்ரோல் விலை உயர்வு குறித்து, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விலை உயர்வு, பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அரசுக்குத் தெரியும். தற்போது 10 சதவீதம் என்ற அளவை நெருங்கியுள்ள பணவீக்கம், இதனால் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம், அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள்தான், விலையை உயர்த்தியுள்ளன; அரசு உயர்த்தவில்லை. டீசல், கெரசின், காஸ் போன்றவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மட்டுமேஅரசுக்கு உள்ளது

1 comment:

SURYAJEEVA said...

அதான் தெரியுமே, உங்க கருத்து என்ன?

Post a Comment