Pages

Search This Blog

Friday, December 16, 2011

பிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது

பிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான்.

அந்த நடிகைக்கு கவர்ச்சி காட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவதுபோன்றதுதான். எள் என்றால் எண்ணையாக இருப்பார். நயன்தாராவே டூ பீஸ் உடையில் நடித்து விட்ட பிறகு, இந்த மழை நாயகி மட்டும் மறுப்பாரா என்ன? அவர் நடித்து வரும் ஒரு படத்தின் சூட்டிங் சமீபத்தில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. அங்குள்ள நீச்சலடிப்பது போன் காட்சியை படமாக்க திட்டமிட்ட இயக்குனர், டூ பீஸ் உடையில் வருமாறு கூறினார். உடை மாற்றும் அறைக்கு சென்ற அம்மணி, அடுத்த நொடியே டூ பீஸில் ரெடி. சூட்டிங் தொடங்கியது. முதல் டேக் முடிந்து இரண்டாவது டேக் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அம்மணியின் டூ பீஸில் ஒரு பீஸ் அவிழ்ந்து விட்டதாம். அவிழ்ந்த பீஸ் ஆடையை எடுக்க முயலுவதற்குள் அது எங்கோ சென்று விட்டது. இதையடுத்து அம்மணி கூச்சல் போட்டு வேறு உடையை கொண்டு வரச் சொன்னார். பின்னர் தண்ணீருக்குள்ளேயே வைத்து உடைமாற்றிக் கொண்டு கரையேறியுள்ளார்.

மேலே வந்த அம்மணி, முதல் டேக்கில் எடுத்த காட்சியை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது டேக் வெளிவந்துவிடக்கூடாது என்று ஒரு அதிரடி உத்தரவை போட்டு விட்டு மீண்டும் உடைமாற்றும் அறைக்குள் புகுந்து கொண்டாராம். அம்மணியின் அரை நிர்வாண காட்சியை ஏராளமானவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் அம்மணியோ... வெளிநாட்டுல இதெல்லாம் சகஜம்பா... என்கிற ரீதியில் எதையுமே கண்டு கொள்ளவில்லையாம். (சினிமா சூட்டிங்கிலயும் இதெல்லாம் சகஜம்தானே

1 comment:

Suresh Subramanian said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

Post a Comment