Pages

Search This Blog

Wednesday, September 19, 2012

முதலிரவில் வெறித்தனம்..



திருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந்த நபரின் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் இப்போது போலீஸார் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த புதுப் பெண்ணை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்பெண்ணின் சிறுநீர்ப் பாதையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 30 வயதான இவருக்கும், நாகப்பட்டனத்தைச் சேர்ந்த நிர்மலாவுக்கும் திருமணம் நடந்தது. செப்டம்பர் 12ம் தேதி திருமணம் முடிந்ததும், அன்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.

அன்று இரவு வெங்கடேசனும், நிர்மலாவும் அறைக்குள் தனிமையில் விடப்பட்டனர். வெங்கடேசன் முதலிரவை சிறப்பாக கொண்டாட தயார் நிலையில் இருந்தார். ஆனால் நிர்மலா பெரும் பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் கணவரை தன்னிடம் அண்ட விடவில்லை. ஆனால் வெங்கடேசன் படு வேகமாக நிர்மலாவை நெருங்குவதிலேயே குறியாக இருந்தாதல் பயந்து அலறியுள்ளார் நிர்மலா.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், உடனே தனது அக்காள் வெங்கடேஸ்வரிக்குப் போன் போட்டு என்ன செய்வது என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஸ்வரி சற்று பொறுமையாக இருக்குமாறு அட்வைஸ் செய்தாராம்.

அதன் பின்னர் வெங்கடேஸ்வரி, நிர்மலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார். பிறகு மணமகனின் வீட்டில் இன்னொரு முதலிரவுக்கு ஏற்பாடு செய்வது என்று தீர்மானித்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 17ம் தேதி வெங்கடேசன் வீட்டில் மறுபடியும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.

17ம் தேதி இரவு நிர்மலாவை அறைக்குள் அனுப்பி வைத்தனர். இப்போதும் நிர்மலா தனது கணவரை நெருங்க விடவில்லை. இதையடுத்து தனது அக்காளை மறுபடியும் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டார் வெங்கடேசன். இரு வருகிறேன் என்று கூறிய வெங்கடேஸ்வரி, முதலிரவு அறைக்குள் நுழைந்தார். அங்கு நிர்மலாவை கட்டாயப்படுத்தி பிடித்து அவரது கைகளையும், கால்களையும் கட்டிலோடு சேர்த்துக் கயிற்றால் கட்டினார். பின்னர் வெங்கடேசனிடம் இப்போது போ என்று கூறி விட்டு வெளியேறியுள்ளார்.

கட்டி வைக்கப்பட்ட நிர்மலாவை ஏதோ விலங்கு வேட்டையாடுவதைப் போல நெருங்கிய வெங்கடேசன் உறவுக்கு முயன்றுள்ளார். ஆனால் கூக்குரலிட்டு அலறிய நிர்மலா, வெங்கடேசனை ஓங்கி உதைத்துள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேசன், மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார். அவரது தாறுமாறான உறவால், ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார் நிர்மலா.

அவரது சத்தம் கேட்டு கதவைத் திறந்து உள்ளே வந்த வெங்கடேஸ்வரி, நிர்மலா ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதற்குள் நிர்மலா வீட்டுக்குத் தகவல் போனது. அவர்கள் போலீஸில் புகார் கொடுத்து விட்டனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வெங்கடேசனையும், வெங்கடேஸ்வரியையும் கைது செய்தனர்.

தற்போது தீவிர சிகிச்சைக்குள்ளாகியுள்ள நிர்மலாவுக்கு சிறுநீர்ப் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

24 comments:

எம்.ஞானசேகரன் said...

கடவுளே! இப்படியெல்லாம் கூட நடக்குமா?

நெற்கொழுதாசன் said...

முடியல்ல மனித மிருகங்கள் அல்லது கல்வியறிவில்லாத மூட .....................

அன்னை சரோஜா பவுண்டேசன் said...

இப்படி பட்ட குடும்பமும் தமிழ் நாட்டுல இருக்க சே என்ன மிருகமா அவனெல்லாம் நிர்கவசி சுடனும்

குட்டன்ஜி said...

மிருகம்!

குறையொன்றுமில்லை. said...

iஇந்தக்காலத்திலும் இப்படில்லாம் நடக்குதா? ஆனாலும் இரண்டு பக்கமும் தவரு இருக்கு

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

இயன்றதைச் செய்வோம்! என்றே
எழுதிய சொற்கள் கண்டேன்!
உயா்ந்ததைச் செய்யும் மோகன்
உருவினில் மாற்றம் ஏனோ?
பயந்ததை நோக்கும் பார்வை
பசுந்தமிழ் வாழ்வில் உண்டோ?
நயந்ததை எண்ணிப் பாராய்!
நம்மொழி நம்மின் வாழ்வு!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

மாலதி said...

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வெங்கடேசனையும், வெங்கடேஸ்வரியையும் கைது செய்தனர்.// இரண்டு பக்கமும் தவரு இருக்கு

Anonymous said...

கொடுமை...சகிக்கவில்லை.(பதிவு)
சரி. மோகன்.பி. ஆணா? பெண்ணா?.தயவுசெய்து குளப்பம் தீர்க்கவும்.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

அதிசயமாதான் இருக்கு....

கிஷோகர் said...

இந்த செய்தியை பேப்பரில் படித்தேன், மனிதன் இன்னமும் முற்றாக கூர்ப்பு அடையவில்லை என்பதற்கு இன்னுமோர் சன்று!

Kathiravan Rathinavel said...

இதுக்குலாம் பேர் கல்யாணமா?
இதுக்கா வளர்த்து நாள் நட்சத்திரம் பார்த்து கட்டி வைக்கறது?

'பசி'பரமசிவம் said...

நடந்த நிகழ்வைக் கற்பனை செய்யும் போதே மனம் நடுங்குகிறது.

பலரும் படிக்க வேண்டிய பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அவர்கள் செய்தது தவறுதன். ஆனால் அந்தப் பெண் மேலும் தவறு இருக்கிறது.

Unknown said...


மனித மிருகம் என்று சொல்வது கூட தவறு! மிருகங்கள் சற்று அறிவோடுதான நடந்து கொள்வதைப் பார்கிறோம்

G.M Balasubramaniam said...


என் பதிவுக்கு முதன் முதலில் வந்து கருத்திட்டதற்கு நன்றி. உங்கள் இந்தப் பதிவைப் படித்தேன். இயற்கைக்கு மாறாக பல நிகழ்வுகள் நடக்கின்றன. நான் கதையல்ல நிஜம் என்று பதிவு எழுதீருந்தேன். உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகள் ஒரு சமயம் அறியாமையின் காரணமாயிருக்கலாம். “அறிந்து கொள்ள , புரிந்துகொள்ள “ என்ற தலைப்பில் நான் எழுதி இருந்த பதிவின் சுட்டி தருகிறேன் .படித்துப் பாருங்கள் http://gmbat1649.blogspot.in/2012/06/blog-post_11html.அதுசரி. உங்களை பற்றிய விவரங்கள் ஏதுமில்லையே. ஆணா, பெண்ணா, வசிப்பிடம் போன்ற தகவல்கள் இல்லையே. தொடர்ந்து வாருங்கள் கருத்திடுங்கள். வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

அந்த பெண்ணை முதலிரவுக்கு முன்னால் அவரது தோழிகள் மூலமாக விபரங்களை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அந்த ஆணும் இன்றில்லா விட்டால் இன்னும் இரண்டொரு நாளில் முயற்ச்சிப்போம் என்று பொறுமையோடு செயல்பட்டிருக்க வேண்டும். இரு பக்கமும் தவறு நடந்துள்ளது.

semmalai akash said...

கணவனும், மனைவியும் சந்தோஷமா இருக்கக்கூடிய ஒரு நிகழ்வை இப்படி வேட்டையாட முயல்வது மாபெரும் தவறு, அதேநேரம் திருமணத்திற்கு பிறகு ஐந்து நாள் இருந்திருக்கிறது, குடும்பத்தில் உள்ளவர்களிடமாவது தனது இந்த நிலைமையை அந்த பெண் சொல்லிருக்கலாம். மனம்விட்டுப் பேசினால் மருந்து எதற்கு????

படைப்பாளி said...

கணவன் மனைவி என்கிற போது விட்டுக்கொடுத்து போகலாமே..மனைவி ஆனப்பின்னும் கணவனை தடுத்தது ஆக்ரோசத்துக்கு வழிவகுத்திருக்கிறது..

Unknown said...

குடும்பத்தில் உள்ளவர்களிடமாவது தனது இந்த நிலைமையை அந்த பெண் சொல்லிருக்கலாம். மனம்விட்டுப் பேசினால் மருந்து எதற்கு?- இதேதான் என் கருத்தும்

காரஞ்சன் சிந்தனைகள் said...

என்ன கொடுமை சரவணன் இது?

indrayavanam.blogspot.com said...

மனைவியிடம் வெறித்தனம் காட்டுமிரண்டி செயல்

சிவகுமாரன் said...

நெஞ்சு பொறுக்குதிலையே

ஆத்மா said...

என்ன கொடுமையிது......:(

VOICE OF INDIAN said...

கடவுளே! கடவுளே!

Post a Comment