Pages

Search This Blog

Monday, August 01, 2011

பிரிவின் வலி !

பிரிவின் வலி ! - காதல் தோல்வி கவிதைகள்


கண்டிராத உன்னை பற்றி
தினம் ஒரு கவிதையை
எழுத நினைத்தேன்.........
முடியவில்லை..!!
நான் காணுகின்ற
உன் அன்பை பற்றி
எழுத நினைத்தேன் ........
முடியவில்லை ....!!
இப்படி உன்னை பற்றி
நினைத்து-நினைத்து
எழுத நினைத்தேன் ........
முடியவில்லை ....!!
வார்த்தைகளால்
சொல்ல முடியாத
ஒன்றை சொல்வதற்கு ...
கனத்த மனதோடு
கற்பனை செய்து
கவிதையை
எழுத நினைத்தேன் ........
முடியவில்லை ....!!
எல்லாம் முடிந்த பின்
உனக்காக எதுவும்
எழுதாமலே இன்று
உன்னையும்
இழந்து விட்டேன் ...!!!
எல்லாம் .......
பொய்யாய் போனது
என் வாழ்வில்.......
உனக்காக எதுவும்
எழுதாமலே ..................!!!!

No comments:

Post a Comment