Pages

Search This Blog

Saturday, July 30, 2011

மிளகு மோர்சா ம்பார்

தேவையான பொருட்கள் :
மிளகு - 25 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், பொட்டுக் கடலை மாவு - 50 கிராம், கெட்டியான மோர் - 3 கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா - 50 கிராம், வெந்தயம் - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 2 கப், நெய் - 100 கிராம், பெருங்காயம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், உப்பு (தேவைக்கேற்ப), கருவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை :


முதலில் துவரம் பருப்பை குழைய வேகவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.


அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும். கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
 

No comments:

Post a Comment